Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று முதல் 9-ம் தேதி வரை கனமழை – தமிழகத்திற்கு எச்சரிக்கை!

இன்று முதல் 9-ம் தேதி வரை கனமழை – தமிழகத்திற்கு எச்சரிக்கை!
, சனி, 5 நவம்பர் 2022 (09:35 IST)
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 9-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என தகவல்.


தற்போது தமிழ்நாடு முழுவதும் பருவமழை தொடங்கியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட வங்க கடலோர மாநிலங்கள் வடகிழக்கு பருவமழையால் அதிக மழைப்பொழிவை பெற்று வருகின்றன.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்கு பருவமழை 2023 ஜனவரி 20ம் தேதி வரை மழைப்பொழிவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15ல் உருவாகும் காற்றழுத்தம் தமிழகத்தின் மையப்பகுதியை நோக்கி நகரும்.

தமிழகம் முழுவதும் நவம்பர் 15 முதல் 20ம் தேதி வரை இயல்பை விட அதிக மழை பொழிவு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வெளியான அறிவிப்பில் தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 9-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

 Edited By: Sugapriya Prakash

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாரந்தூர் விமான நிலையம் காலத்தின் கட்டாயம்!