Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘ஆதித்யா எல்-1’ விண்கல திட்ட இயக்குனர் தென்காசியை சேர்ந்த பெண் விஞ்ஞானியா?

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (10:21 IST)
நாளில் விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனராக தென்காசியை சேர்ந்த பெண் இயக்குனர் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நாளை அதாவது செப்டம்பர் இரண்டாம் தேதி ஆதித்யா எல்-1  என்ற விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ளது.  இதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி விட்டதாகவும் இந்த செயற்கைக்கோளில் ஆதித்யா எல்-1 விண்கலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன
 
இந்த விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும் என்றும் சூரியனின் வெப்பநிலை உள்பட பல்வேறு ஆய்வுகளை செய்யும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல் 1 விண்கலம் திட்ட இயக்குனராக தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே  சந்திராயன் 3 விண்கலத்தில் 3 தமிழர்கள் பணியாற்றிய நிலையில் தற்போது ஆதித்யா எல் 1 விண்கலத்திலும் தமிழர் பணியாற்றி உள்ளது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்ன் படங்களை பார்ப்பதற்கு இனி பாஸ்போர்ட்! ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு!

உசிலம்பட்டி சாலை முழுக்க 500 ரூபாய் நோட்டுகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

சிபிஎஸ்இ நியனமன தேர்வில் இந்தித் திணிப்பு.. மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்..!

காதலை ஏற்க மறுத்த 14 வயது சிறுமி.. ஜாமினில் வெளிவந்து வெட்டி கொலை செய்த இளைஞர்..!

கனமழை காரணமாக நிலச்சரிவு.. சிம்லாவில் 80 சாலைகள் மூடப்பட்டன..!

அடுத்த கட்டுரையில்
Show comments