Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு மதுவிலக்கை நோக்கி நகர வேண்டும் -திருமாவளவன்

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (15:11 IST)
தமிழக அரசு மதுவிலக்கை நோக்கி  நகர வேண்டுமென்று  விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கள்ள சாராயம் அருந்தி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் முக. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று மதுரையில், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் நச்சு சாராயம் அருந்தி 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.  முதல்வர் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறியதுடன், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.கள்ளச்சாராயம் விற்றவர்களை கைது செய்தாலும், தமிழக அரசு அதைத்தாண்டி சிந்திக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

முதலமைச்சர் மதுவிலக்கை  நடைமுறைப்படுத்துவது பற்றி தீவிரமாக ஆராய வேண்டும். மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். மது அருந்துவதால்  தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 ஆண்டுகளாகியும் பணி நிலைப்பு வழங்கவில்லை.. இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? டாக்டர் ராமதாஸ்

அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறுதியேற்போம்: விஜய் குடியரசு தின வாழ்த்து..!

இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செரியன் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்..!

சீமான் இதை நிறுத்தலைனா கடும் விளைவுகளை சந்திப்பார்! - தமிழீழ போராளிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை!

சரியான ஆண் மகனாக இருந்தால் பெரியார் பெயர் சொல்லி வாக்கு கேளுங்கள் பார்க்கலாம்.. சீமான்

அடுத்த கட்டுரையில்
Show comments