Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர் நடத்தி வரும் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர் நடத்தி வரும் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு
, வெள்ளி, 12 மே 2023 (20:50 IST)
2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பாஜக தலைவர் ஆதரவு அளித்துள்ளார்.

இதுபற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பில், 2013ஆம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு  பாஜகவின் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டேன்.

2013 ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசாணை 149ஐக் கைவிட்டு, நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பாஜக சார்பாக ஏற்கனவே 12/02/2022 மற்றும் 10/04/2023 ஆகிய தேதிகளில் அறிக்கைகள் வெளியிட்டிருந்தோம்.

ஆசிரியப் பணி எனும் உன்னதமான பணியில் இருக்கும் சகோதர சகோதரிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும், தொடர்ந்து அவர்களை அலைக்கழிக்க வேண்டாம் என்றும் திறனற்ற திமுக அரசை வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமானியின் தோழியை காக்பிட்டில் அமர வைத்த சம்பவம்....ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்