Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் 18 தமிழக மீனவர்களை சிறைபிடித்த சிங்கள கடற்படை.. இதற்கு ஒரு முடிவே இல்லையா?

Advertiesment
தமிழக மீனவர்கள்

Siva

, செவ்வாய், 3 டிசம்பர் 2024 (09:52 IST)
தமிழக மீனவர்களை சிங்கள கடற்கரையினர் கைது செய்யும் நடவடிக்கை பல ஆண்டுகளாக தொடர்கதை ஆகி வரும் நிலையில், தற்போது மீண்டும் 18 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாகவும், அவர்கள் பயணம் செய்த இரண்டு விசைப்படகுகளையும் சிறை பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலம் காலமாக, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக மீனவர் சங்கங்கள் பலமுறை மத்திய மற்றும் மாநில அரசுக்கு வலியுறுத்தி உள்ளன. தமிழக முதல்வர் பலமுறை மத்திய அரசுக்கு இது குறித்து கடிதம் எழுதி உள்ளார்.

இருப்பினும், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதை ஆகி வரும் நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் விழுப்புரம் வழியாக இயக்கப்படும் ரயில்கள்.. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை..!