Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்பா? பிரேமல்தா விஜயகாந்த் தகவல்..!

Siva
ஞாயிறு, 2 மார்ச் 2025 (15:54 IST)
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மார்ச் 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அவர், "தேமுதிக பொருத்தவரை தாய் மொழியை மட்டுமின்றி, அனைத்து மொழிகளையும் காக்க வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு. அனைத்து கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியான எங்களுக்கும்  முன்பே அழைப்பு வந்துவிட்டது. எனவே, உறுதியாக அந்த கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்," என்று கூறினார்.
 
ஏற்கனவே அதிமுகவும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் என்று அறிவித்த நிலையில், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் இந்த கூட்டத்தில் பங்கேற்கும் நிலையில், எதிர்க்கட்சிகளான அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளும் பங்கேற்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், பாமகவும் இந்த கூட்டத்தில் பங்கேற்கும் என முன்பே அறிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments