ஓவர் நைட்ல ஒன்னும் நடக்கல, முருகன் அண்ட் கோ-வின் 5 நாள் சாலிட் ப்ளானிங்!!

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (10:56 IST)
5 நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக சுவரில் ஓட்டை போட்டு, லலிதா ஜுவல்லரிக்குள் நுழைந்து திருடியதாக விசாரணையில் தெரிவிவந்துள்ளது. 
 
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளையை குறித்து போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில், திரூவாரில் மணிகண்டன் என்பவர் 5 கிலோ நகையுடன் கைதானார். 
 
அவருடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட சீராத்தோப்பு சுரேஷ் என்பவரை போலீஸார் தேடி வந்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்துக்கு முருகன்தான் தலைவன் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சுரேஷ், செங்கம் கோர்ட்டிலும், முருகன் பெங்களூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் சரணடைந்தார். 
இந்நிலையில், சுரேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், விசாரணையில் சில திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஆம், முருகன், சுரேஷ், கணேஷ் ஆகியோர் நீண்ட நாட்களாக கடையை நோட்டமிட்டு இரவு நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக சுவரில்ல் துளையிட்டு வந்துள்ளனர். 
 
அதாவது, செப் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இரவு நேரங்களில் கொள்ளைக்காக இவர்கள் ஆயத்தமாகி வந்துள்ளனர். சம்பவ நாளன்று முருகன் மற்றும் சுரேஷ் கடைக்குள் செல்வதாக இருந்தனர். ஆனால், சுரேஷால் அந்த துளைக்குள் நுழைய முடியாத காரணத்தால் முருகனோடு கணேஷ் முகமூடி அணிந்து கடைக்குள் புகுந்துள்ளான் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments