Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சனாதனம் குறித்து சர்ச்சை பேச்சு: தமிழக அரசு, உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Advertiesment
udhyanidhi
, வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (14:32 IST)
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து பதில் அளிக்க தமிழக அரசு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
சனாதன சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சனாதாரம் குறித்து அமைச்சர் ஒருவரே பேசியது விரும்பத்தகாதது என்று உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு அமைச்சர் உதயநிதி மற்றும் தமிழக அரசு என்ன பதில் அளிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விஷாலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் எடுக்கக்கூடாது- உயர் நீதிமன்றம்