Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இடி மின்னலுடன் திடீர் கனமழை.. சாலைகளில் வெள்ளம்.. குளிர்ச்சியான தட்பவெப்பம்..!

Siva
புதன், 16 ஏப்ரல் 2025 (11:27 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் வெயில் கொளுத்தியது என்பதும், சில பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான வெப்பம் பதிவான நிலையில், சற்றுமுன் திடீரென சென்னையில் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னையில் கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், வேப்பேரி, ஓட்டேரி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதைப் போல் தேனாம்பேட்டை, அண்ணா சாலை, நந்தனம், பாண்டி பஜார்,  நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதாக தகவல் வழியாக உள்ளன.
 
கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீர் மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவி உள்ளது என்றும், இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் தெரிகிறது.
 
அதுமட்டுமின்றி, திடீரென பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் வெள்ளமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனத்தை இயக்க அறிவுறுத்தப்படுகிறது என்றனர்.
 
கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், வேப்பேரி, அண்ணா சாலை, மெரினா, பட்டினப்பாக்கம், எம்ஆர்சி நகர், நந்தனம், மாம்பலம், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருவதாகவும், எனவே இந்த பகுதியில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments