Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: ஈபிஎஸ் உறுதி

Mahendran
புதன், 16 ஏப்ரல் 2025 (11:20 IST)
பாஜகவுடன் கூட்டணி மட்டுமே அமைத்துள்ளோம் என்றும், கூட்டணி ஆட்சி கிடையாது என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிப்பட கூறியுள்ளார்.
 
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என அமித்ஷா கடந்த வாரம் சென்னை வந்த போது அறிவித்த நிலையில், வெற்றி பெற்ற பிறகு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
 
இந்த நிலையில், சட்டசபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார். அப்போது, "தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்" என்று யாரும் தெரிவிக்கவில்லை என்றும், டெல்லிக்கு பிரதமர் நரேந்திர மோடியும், தமிழகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி என்று தான் அமித்ஷா கூறி இருந்தார் என்றும், அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
பாஜகவுடன் தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளோம் என்றும், ஆனால் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார். "திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்" என்ற கருத்துக்களை உடைய அனைத்து கட்சியுடனும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தான் நாங்கள் முயற்சித்து வருகிறோம் என்றும், அந்த முயற்சியின் ஒரு கட்டம்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments