Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: திடீர் வெள்ளத்தால் கோவிலுக்கு சென்றவர்கள் தவிப்பு..!

Siva
சனி, 2 நவம்பர் 2024 (08:40 IST)
மேற்கு தொடர்ச்சி மலையில் திடீரென கனமழை பெய்ததால், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டத்தில் உள்ள ராக்காச்சி அம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் தவித்து வருவதாகவும், பெண்கள் உள்பட சுமார் 150 பக்தர்கள் சிக்கித் தவித்த நிலையில் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ராக்காச்சி அம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கிய தகவல் அறிந்ததும், ராஜபாளையம் தீயணைப்பு படையினர் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டதாகவும், அனைத்து பக்தர்களையும் பாதுகாப்பாக மீட்டதாகவும் கூறப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ராசாத்தி அம்மன் கோவிலுக்கு விடுமுறை காரணமாக வழக்கத்தை விட அதிக கூட்டம் இருந்தது. ஆனால் திடீரென பெய்த மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து திடீரென வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments