Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாதயாத்திரை பக்தர்களுக்கு ஓய்விட பூங்காவை கனிமொழி எம் பி திறந்துவைத்தார்....

பாதயாத்திரை பக்தர்களுக்கு ஓய்விட பூங்காவை கனிமொழி எம் பி திறந்துவைத்தார்....

J.Durai

, திங்கள், 28 அக்டோபர் 2024 (10:46 IST)
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், முத்தையாபுரம் உப்பாற்று ஓடை பாலத்தையொட்டி, திருச்செந்தூர் கோவிலுக்கு நடைபயணமாக செல்லும் பக்தர்களுக்காக, 
ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் ஓய்விட பூங்கா கட்டப்பட்டுள்ளது.
 
மேலும் கிரேஸ்நகரில் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த பூங்காவை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  கருணாநிதி  திறந்து வைத்தார். 
 
இவ்விழாவில், சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாநகராட்சி மேயர் என்.பிஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரையில் மழை வெள்ளம் அமைச்சர்கள் ஆய்வு.