Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு எப்போது? பள்ளிக்கல்வித்துறை

10th
, வெள்ளி, 17 ஜூன் 2022 (17:11 IST)
சமீபத்தில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு வைக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
 
இது குறித்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அடுத்த மாதம் நடைபெறும் உடனடித் தேர்வில் பங்கேற்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
எனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு அடுத்த மாதம் தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதியோர்களை திரட்டி மாபெரும் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி