Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆன்லைன் கிளாஸுக்கு செல்போன் இல்லை… மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!

ஆன்லைன் கிளாஸுக்கு செல்போன் இல்லை… மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (11:05 IST)
ஆன்லைன் கிளாஸ் வகுப்புகளைக் கவனிப்பதற்கு செல்போன் இல்லாத காரணத்தால் திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக பள்ளிகள் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவ மாணவிகளுக்கு செல்போன் தேவைப்படுகிறது. பல வீடுகளில் இன்னமும் செல்போன் கூட வாங்கிக் கொடுக்க முடியாத பெற்றோரின் பொருளாதார சூழல் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்ற கூலித் தொழிலாளியின் மகள் ரித்திகா 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்க செல்போன் வாங்கி தர முடியாத வறுமையான பொருளாதார சூழலில் அவரது பெற்றோர் இருந்துள்ளனர். இதனால் மனமுடைந்த ரித்திகா வீட்டில் யாருமில்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபோல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ்மாக் விற்பனையாளடுருக்கு கத்தி குத்து – 2 லட்சத்தைக் கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்கள்!