Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் 33 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 33 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (09:58 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படும் நிலையில் கொரோனா பாதிப்புகள் 33 லட்சத்தை தாண்டியுள்ளது.
 
இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், நாளுக்கு நாள் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 77,266 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு  33,10,234 இல் இருந்து 33,87,501 ஆக உயர்ந்துள்ளது. 
 
கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 1,057 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 61,529 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் நேற்று ஒரே நாளில் 60,177 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 25.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸை கொல்வோம்; சபதம் ஏற்ற ட்ரம்ப்! – தேர்தல் ட்ரிக்கா?