Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் மாணவர் அரிவாள் வெட்டு.. ஏப்ரல் 24ல் முக்கிய அறிவிப்பு: அன்பில் மகேஷ்..!

Siva
புதன், 16 ஏப்ரல் 2025 (07:05 IST)
நெல்லையில் நேற்று மாணவர் ஒருவர், சக மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்த நிலையில், மாணவர்களை ஒழுங்குபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.
 
இந்த நிலையில், இது குறித்து இன்று பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நெல்லையில், மாணவர் அரிவாளால் சக மாணவர் மற்றும் ஆசிரியரை வெட்டிய சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
 
மேலும், மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க பல்வேறு வகைகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், சில சம்பவங்கள் இவ்வாறு நடைபெறுவது வேதனையை அளிக்கிறது என்றும், இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க மாணவர்களை செம்மைப்படுத்த சில வகை பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
 
தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை 24ஆம் தேதி நடைபெறும் போது, இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறினார். அந்த அறிவிப்பு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments