Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருநாய்கள் தொல்லை தாங்கல.. ஏதாவது பண்ணுங்க! - மேயர் பிரியாவுக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்!

Prasanth Karthick
புதன், 19 மார்ச் 2025 (08:16 IST)

சென்னையில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருவது குறித்து நடவடிக்கை எடுக்க மேயர் பிரியாவுக்கு எம்.பி கார்த்திக் சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.

 

சென்னையில் கடந்த சில மாதங்களாக தெருநாய்கள், வளர்ப்பு நாய்களால் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. தெருநாய்கள் முன்பெல்லாம் தெருவுக்கு ஒன்று, இரண்டு சுற்றி வந்த நிலையில், தற்போது பெருகி 10க்கும் மேற்பட்ட நாய்கள் சில பகுதிகளில் கூட்டமாக உலா வருகின்றன.

 

இந்நிலையில் சென்னையில் தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து மேயர் பிரியாவுக்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். அதில் சென்னையில் மட்டும் சுமார் 1.80 லட்சத்திற்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளதாகவும், அதில் சுமார் 73 சதவீத நாய்கள் கருத்தடை செய்யப்படாதவை என்பதால் நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

சென்னையில் வளர்ப்பு பிராணிகள் வளர்க்க உரிமம். கட்டணம், வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி போடுதல் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தெருநாய்கள் விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments