Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சின்ன பையனை வைத்து சின்ன லெவல் திருட்டு! – சென்னையில் போக்கு காட்டும் திருடன்

சின்ன பையனை வைத்து சின்ன லெவல் திருட்டு! – சென்னையில் போக்கு காட்டும் திருடன்
, வியாழன், 10 செப்டம்பர் 2020 (11:36 IST)
சென்னையில் சிறுவன் ஒருவனை வைத்து மர்ம ஆசாமி வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் கச்சனாகுப்பம் பகுதிகளில் கேஸ் சிலிண்டர், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள் போன்ற பொருட்கள் அடிக்கடி களவு போவதாக புகார்கள் எழுந்து வந்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பரிமளா என்பவரின் வீட்டில் 10 ஆயிரம் பணம் மற்றும் செல்போன்கள் திருட்டு போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில் நள்ளிரவு நேரங்களில் ஆசாமி ஒருவர் 10 வயது மதிக்கத்தக்க சிறுவனுடன் வருவதும், அந்த சிறுவன் வீட்டிற்குள் புகுந்து அகப்பட்ட பொருட்களை திருடி வருவதும் தெரிய வந்துள்ளது. சிறுவனை வைத்து திருடும் ஆசாமி யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று, நாளை இரண்டு நாட்களுக்கு மாதுபானக் கடைகள் மூடல்