Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும்: வாக்களித்த பின் ஸ்டாலின் பேட்டி

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (08:32 IST)
மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும்
தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு காலை 7 மணி அளவில் நடைபெற்று வருகிறது என்பதும் அரசியல்வாதிகள் திரையுலக பிரபலங்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் மிகுந்த ஆர்வத்துடன் காலை 7 மணிமுதல் வாக்களித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது மனைவி மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலின் உடன் வந்து வாக்களித்தார். அவர் வாக்களித்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ’இது ஆளுங்கட்சிக்கு எதிரான தேர்தல் என்றும் மே இரண்டாம் தேதி மக்களின் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் தனக்கு வந்த தகவலின் படி அனைத்து தொகுதிகளிலும் அதிக அளவு வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும் இந்த தேர்தல் ஒரு மாற்றத்திற்கான தேர்தல் என்றும் அவர் தெரிவித்தார் 
 
முன்னதாக முக ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் அண்ணா மற்றும் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்துடன் வாக்களிக்க வந்த போது அவருக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறையினர் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments