Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாக்குப்பதிவு துவங்கவில்லை... ஓமலூர் தொகுதி மக்கள் காத்திருப்பு!

வாக்குப்பதிவு துவங்கவில்லை... ஓமலூர் தொகுதி மக்கள் காத்திருப்பு!
, செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (08:01 IST)
சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் பல இடங்களில் இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. 

 
தமிழகம் புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சற்று முன் மூன்று மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. 
 
தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதாகவும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
 
ஆனால், சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் பல இடங்களில் இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. இதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவுக்கு தபால் வாக்கு வழங்கவேண்டும்…. அமமுக வேட்பாளர் கோரிக்கை!