Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களைகட்டும் திருவண்ணாமலை தீபத்திருவிழா! சிறப்பு ரயில்களை இயக்க முடிவு!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (09:27 IST)
திருவண்ணாமலையில் நடைபெற உள்ள தீபத்திருவிழாவிற்காக ஏராளமான பக்தர்கள் வர உள்ளதால் சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இல்லாமல் நடந்த திருவண்ணாமலை தீபத்திருவிழா இந்த முறை பக்தர்களுடன் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. நவம்பர் 27ம் தேதி கொடியேற்றம் தொடங்கி விழாவின் சிகர நிகழ்வான மகாதீப நிகழ்வு டிசம்பர் 6ம் தேதி நடைபெறுகிறது.

இதற்காக திருவண்ணாமலைக்கு பல பக்தர்களும் செல்வார்கள் என்பதால் ஏற்கனவே தமிழக போக்குவரத்து கழகம் அனைத்து பகுதிகளில் இருந்தும் 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஏற்கனவே 9 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பு ரயில்கள் டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில் இயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments