Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருவண்ணாமலைக்கு 2700 சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு

Truvannamalai
, வியாழன், 24 நவம்பர் 2022 (10:15 IST)
திருவண்ணாமலையில் உலகப் புகழ்பெற்ற தீபத்திருவிழா நடைபெற இருப்பதை அடுத்து 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 
 
திருவண்ணாமலையில் தீப திருவிழா வரும் டிசம்பர் 6 மற்றும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
 
பக்தர்களின் வருகையை பொருத்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் தயாராக இருப்பதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் இந்த சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டு நாள் இறக்கத்திற்கு பின் திடீரென உயர்ந்த தங்கம் விலை!