Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

11ம் தேதி முதல் முன்பதிவில்லா ரயில் சேவைகள்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Train
, செவ்வாய், 5 ஜூலை 2022 (10:02 IST)
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த முன்பதிவில்லா ரயில் சேவைகளில் சிலவற்றை மீண்டும் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கடந்த சில காலமாக கொரோனா பாதிப்பால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஜூலை 11ம் தேதி முதல் சில முன்பதிவில்லா ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருப்பதி – காட்பாடி ரயில் – திருப்பதியில் காலை 10.55 மணிக்கும், காட்பாடியில் இரவு 9.55 மணிக்கும் புறப்படும்.

விழுப்புரம் – மயிலாடுதுறை ரயில், விழுப்புரத்தில் மதியம் 2.25 மணிக்கும், மயிலாடுதுறையில் காலை 6 மணிக்கும் புறப்படும்.

விழுப்புரம் – புதுச்சேரி இடையேயான இரண்டு முன்பதிவில்லா ரயில்கள் விழுப்புரத்தில் காலை 5.30 மணிக்கு ஒன்றும், மாலை 5.50 மணிக்கு ஒன்றும் புறப்படும். மீண்டும் புதுச்சேரியிலிருந்து காலை 8.10 மணிக்கு ஒன்றும், மற்றொன்று இரவு 7.45 மணிக்கும் புறப்படும். இந்த ரயில் சேவைகள் ஜூலை 11 முதல் தினசரி செயல்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை: இன்று மட்டும் இவ்வளவு உயர்வா?