Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென் மாவட்ட ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் ஏ.சி. பெட்டிகளாக மாற்றமா?

Train
, புதன், 13 ஜூலை 2022 (18:49 IST)
தென்மாவட்ட ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகளை ஏசி பெட்டிகள் ஆக மாற்ற பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் முக்கிய ரயில்கள் சிலவற்றுக்கு ஸ்லீப்பர் பெட்டிகளை ஏசி பெட்டிகள் ஆக மாற்ற ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் போன்ற தென்மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டு ஸ்லீப்பர் பெட்டிகளை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை ஏசி பெட்டிகள் ஆக மாற்ற செய்ய ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
ஏற்கனவே மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை ரத்து செய்ததை அடுத்து தற்போது மேலும் வருவாயை பெருக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

15 வயது சிறுவனுடன் காதல்: 35 வயது பெண்ணை அடித்து நொறுக்கிய கணவர்