Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளியின் அங்கீகாரம் ரத்தா?

சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளியின் அங்கீகாரம் ரத்தா?
, புதன், 16 ஜூன் 2021 (14:40 IST)
சிவசங்கர் பாபா நடத்திவரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நல ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியிலுள்ள மாணவிகள் சிலர் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை9 சற்று முன்னர் டெல்லியில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
 
இந்த நிலையில் சிவசங்கர் பாபா நடத்திவரும் சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் பாலியல் அத்து மீறல்கள் நடந்துள்ளதை அடுத்து அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முஸ்லீம் முதியவர் மீது தாக்குதல்? – சர்ச்சையான நிலையில் காவல்துறை விளக்கம்!