Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவசங்கர் பாபாவுக்கு உதவிய ஆசிரியைகள் மீது வழக்கு!

சிவசங்கர் பாபாவுக்கு உதவிய ஆசிரியைகள் மீது வழக்கு!
, செவ்வாய், 15 ஜூன் 2021 (16:05 IST)
சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது 
 
இதனை அடுத்து சிவசங்கர் பாபா தற்போது டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி வெளியானதை அடுத்து சிபிசிஐடி தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்துள்ளனர் என்பதும் அவர் கைது செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் செய்தியின்படி சிவசங்கர் பாபாவுக்கு உதவிய 2 ஆசிரியைகள் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் பதிவு செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. சிவசங்கர் பாபாவின் பாலியல் தொல்லை சம்பவத்திற்கு இரண்டு ஆசிரியர்கள் உதவியதாகவும் இதனை அடுத்து அவர்கள் இருவர் மீதும் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது அது மட்டுமின்றி இந்த விவகாரத்தில் மேலும் சில ஆசிரியைகளும் சிக்குவார்கள் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்!