ஓய்வு பெறும் மறுநாளே புதிய பொறுப்பு.. சங்கர் ஜிவால் IPS-க்கு என்ன பதவி?

Mahendran
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (16:14 IST)
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் ஐபிஎஸ், நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற அடுத்த நாளே அவருக்கு இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
தீயணைப்பு பணிகளில் நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதற்காகவும், கட்டிடங்களுக்கான தீயணைப்பு சான்றிதழ்கள் வழங்கும் பணிகளை முறைப்படுத்தவும் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பின் தலைவராக, சட்டம்-ஒழுங்கு துறையில் தனது அனுபவங்களை சிறப்பாக பயன்படுத்த சங்கர் ஜிவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த புதிய பொறுப்பு காவல்துறை மற்றும் அரசு வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments