ஆப்கானிஸ்தான் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்.. 3 பேர் பரிதாப பலி..!

Siva
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (15:54 IST)
பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானின் எல்லை பகுதிகளில் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது மூன்று பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், ஏழு பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆப்கானிஸ்தானின் தலிபான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தானின் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் நங்கர்ஹர் மற்றும் ஹோஸ்ட் மாகாணங்களில் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் மூன்று அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததுடன், ஏழு பேர் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வீடுகளும் சேதமடைந்துள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து பாகிஸ்தான் அரசு அல்லது ராணுவம் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவில்லை.
 
பாகிஸ்தான். தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் போன்ற பயங்கரவாத குழுக்கள் பாகிஸ்தானில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments