நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

Prasanth Karthick
ஞாயிறு, 30 மார்ச் 2025 (11:07 IST)

சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் தேர்தல் குறித்து செயல்பாடுகளில் அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. முக்கியமாக அதிமுக கூட்டணி குறித்த நகர்வுகளை தொடங்கியுள்ள நிலையில் சமீபத்தில் எடப்பாடியின் டெல்லி சந்திப்பு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை நீக்குவது, ஓபிஎஸ், தினகரனை கூட்டணியை விட்டு நீக்குவது போன்றவை. ஆனால் பாஜக மேலிடத்திற்கு இதில் உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது.

 

இந்நிலையில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனுக்கு மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

 

இது பல்வேறு யூகங்கள் எழ காரணமாகிறது. முக்கியமாக எடப்பாடி பழனிசாமியின் நிபந்தனைகளை ஏற்க முடியாததால் அதிமுகவின் தலைமையை மாற்ற பாஜக சீக்ரெட் மூவ் செய்து வருகிறதா என்ற ஐயத்தையும் இது அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments