Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை அனுப்புங்கள்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை அனுப்புங்கள்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
, வியாழன், 3 ஜூன் 2021 (20:14 IST)
தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருந்த நிலையில் முதல்வர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் மத்திய அரசு சமீபத்தில் 4.20 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை அனுப்ப வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார் 
 
கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த உடனடியாக முப்பதாயிரம் மருந்து குப்பிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்களுக்கு முதலமைச்சர் தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் இருந்துவரும் நிலையில் அவர்களுக்கான மருந்தை உடனடியாக தேவைப்படுவதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து மத்திய அரசு விரைவில் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தும் மருந்து குப்பிகளை அனுப்பி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் கருணாநிதிக்கு மரியாதை செலுத்திய முக அழகிரி! எங்கே தெரியுமா?