Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ்....மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு  தேர்ச்சி சான்றிதழ்....மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
, வியாழன், 3 ஜூன் 2021 (17:28 IST)
ஆசிரியர் தகுதித் தேர்வு  தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வை ( TET அறிவித்தது.  ஆனால் 2011 ஆம் ஆண்டு முதல் இத்தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்ற இடைநிலைக் கல்வி, முதுநிலைக் கல்வி,பட்டதாரி ஆசிரியர்களுக்கு 7 ஆண்டு காலம் வரைதான்  ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் செல்லுபடியாகும். அதன்பிற்கு மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டுமெனக் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகளுக்குப் பதிலாக  ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் எனக் கூறியுள்ளது.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்தான்  அரசு ஆசிரியர்களாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் தனியார் ரயில்கள்...