Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில் சொத்து விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம்! – அமைச்சர் சேகர் பாபு உத்தரவு!

Webdunia
புதன், 19 மே 2021 (13:45 IST)
தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சி அமைக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு துறைகளில் பல்வேறு மாற்றங்கள், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீப காலமாக அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் வருமானங்கள், செலவினங்கள் பற்றி வெளிப்படை தன்மை இல்லை என்றும், கோவில்களை மக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் பலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் புதிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். அதன்படி கோவில் நிலங்கள், கட்டிடங்களின் விவரங்கள், கோவில் நிர்வாகம், அர்ச்சகர்கள், அலுவலர்கள், திருப்பணிகள், விழா உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பொதுமக்கள் எளிதில் பார்க்கும் விதமாக இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments