Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில் சொத்து விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம்! – அமைச்சர் சேகர் பாபு உத்தரவு!

Webdunia
புதன், 19 மே 2021 (13:45 IST)
தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சி அமைக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு துறைகளில் பல்வேறு மாற்றங்கள், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீப காலமாக அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் வருமானங்கள், செலவினங்கள் பற்றி வெளிப்படை தன்மை இல்லை என்றும், கோவில்களை மக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் பலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் புதிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். அதன்படி கோவில் நிலங்கள், கட்டிடங்களின் விவரங்கள், கோவில் நிர்வாகம், அர்ச்சகர்கள், அலுவலர்கள், திருப்பணிகள், விழா உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பொதுமக்கள் எளிதில் பார்க்கும் விதமாக இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments