Publish Date: Fri, 18 Jun 2021 (10:23 IST)
Updated Date: Fri, 18 Jun 2021 (10:25 IST)
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் விவரங்கள் வெளியீட்டில் நகை விவரங்கள் வெளியிடப்படாது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அலுவலக விவரங்கள், சொத்து மற்றும் நில விவரங்களை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஆன்லைனில் பதிவேற்ற சமீபத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டிருந்தார். அதன்படி கோவில் விவரங்கள் அனைத்தும் மெல்ல ஆன்லைனில் பதிவேற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆய்வுகள் மேற்கொண்ட பின் பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு ”கோவில்களின் நகை விவரங்கள் ஆன்லைனில் வெளியிடப்படாது. அசையும் சொத்துகளின் விவரங்களை ஆன்லைனில் பதிவது பாதுகாப்பற்றது. தமிழகத்தில் ஒரு கொரோனா பலி கூட ஏற்படாத நாள் வரும்போது கோவில்கள் திறக்கப்படும்” என கூறியுள்ளார்.