Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என கூற நீதிமன்றம் யார்? சீமான்

Webdunia
வியாழன், 30 ஜனவரி 2020 (17:20 IST)
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வேண்டாம் என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில் இது குறித்து பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது’ என தீர்ப்பளித்தது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
 
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என சொல்ல நீதிமன்றம் யார்? என கேட்கிறேன். குற்றம் செய்கிறவர்கள், கொள்ளை அடிப்பவர்கள், கொலை செய்பவர்கள், ஊழல் செய்ப்வர்களை விசாரித்து தண்டனை கொடுப்பதுதான் நீதிமன்றத்தினுடைய வேலை.
 
மாணவர்கள் படிப்பு விஷயங்களில் தலையிடுவது என்ன நியாயம். நீங்கள் எல்லாரும் நீட் தேர்வு எழுதித்தான் வந்தீர்களா? இது எப்பேர்ப்பட்ட சர்வாதிகாரம். நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது என நீதிமன்றம் முடிவு செய்வதால் இது பாராளுமன்ற, சட்ட மன்ற ஜனநாயகமா அல்லது நீதிமன்ற ஆட்சியா? என இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments