விடுமுறை அறிவிப்புக்கு பின் விடைபெற்ற மழை: ரத்தாகுமா விடுமுறை

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (07:29 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. மேலும் இந்த மழை இன்றும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது 
 
இதனையடுத்து சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்புகள் நேற்று இரவே வெளிவந்துவிட்டது. ஆனால் இன்று விடுமுறை என உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவுக்கு பின் மழை குறைய ஆரம்பித்துவிட்டது. இன்று அதிகாலை முதல் சென்னையின் முக்கிய பகுதிகளை சுத்தமாக மழை இல்லை. அதுமட்டுமின்றி முக்கிய சாலைகளில் தேங்கி இருந்த தண்ணீரும் தற்போது வடிந்து விட்டன 
 
இதனால் அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து ஆகி இன்று பள்ளி கல்லூரிகளில் இயங்கும் என்று அறிவிப்பு வருமா? என்ற சந்தேகம் ஒருசிலருக்கு ஏற்பட்டுள்ளது. ஒருசில தனியார் கல்லூரிகள் இன்று கல்லூரி இயங்கும் என மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இன்று பள்ளிகள் இயங்கும் என்ற அறிவிப்பு அதிகாரபூர்வமாக இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments