Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை-நாளை மறுநாள் தேர்வு ஒத்திவைப்பு; 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Advertiesment
கனமழை
, ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (18:25 IST)
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை நாளையும் நாளை மறுநாளும் நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை வானிலை ஆய்வு மையம் ஆகியவை உறுதி செய்துள்ளன
 
இந்த நிலையில் நாளையும் நாளை மறுநாள் நடைபெற இருந்த கேங்மேன் நேர்முகத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக இந்த அறிவிப்பு என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளதோடு, இந்த நேர்முகத்தேர்வின் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.
 
மேலும் நாளை தூத்துகுடி, மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என தூத்துகுடி மாவட்ட ஆட்சி தலைவரும், நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கடலூர் மாவட்ட ஆட்சி தலைவரும் அறிவித்துள்ளனர். 
 
இதனையடுத்து மேலும் சில மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை 9 மாவட்டங்களில் மிக கனமழை: சென்னை மிதக்குமா?