Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி, கல்லூரிகள் திறப்பது தள்ளி வைக்கப்படுகிறதா? தமிழக அரசு திடீர் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (09:59 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு வரும் 16ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவித்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ததாகவும் இந்த ஆலோசனையில் கொரோனா மற்றும் பருவ மழையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கலாமா என்று அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை கேட்டதாகவும் தெரிகிறது
 
இதனால் வரும் 16ஆம் தேதி 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கும் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்படும் என்றும் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. எனினும் இதுகுறித்து தமிழக அரசிடமிருந்து முறையான அறிவிப்பு வந்த பின்னரே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments