Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி சிறுமி பலி! கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு! - சென்னை கமிஷனர் உத்தரவு!

Prasanth K
வியாழன், 19 ஜூன் 2025 (12:12 IST)

நேற்று நடந்த சாலை விபத்தில் பள்ளி மாணவி பலியான நிலையில் கனரக வாகனங்களுக்கு சென்னையில் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

 

பெரம்பூரில் நேற்று பள்ளிக்கு தாயுடன் ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்த 10 வயது சிறுமி சௌமியா பின்னால் வந்த லாரி மோதியதில் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மக்கள் பள்ளிகளுக்கு, அலுவலகங்களுக்கு செல்லும் பிஸியான நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்குவதற்கான நேரக்கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது.

 

இந்நிலையில் இதுத்தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். அதன்படி காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் 8 மணி வரையிலும் பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. இந்த நேரக்கட்டுப்பாட்டை காவலர்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும். இந்த நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2013ல் ஏற்பட்ட கேதார்நாத் வெள்ளம்.. 12 ஆண்டுகளாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத 702 உடல்கள்..!

ஈரான் எச்சரிக்கை! இஸ்ரேலை சுற்றி கப்பலை நிறுத்தும் அமெரிக்கா! - என்ன நடக்கிறது?

30 மணி நேரத்தில் செய்த வேலையை 5 மணி நேரத்தில் செய்கிறேன்.. ChatGPT குறித்து இன்போசிஸ் நாராயணமூர்த்தி..!

கோவிலில் பலே திருட்டு.. ஆனால் அசந்து தூங்கியதால் சிக்கிய திருடன்!

முடிவே இல்லையா? ஒரே நாளில் 3 இண்டிகோ விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள்: பயணிகள் அச்சம்!

அடுத்த கட்டுரையில்
Show comments