Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளி சிறுமி பலி! கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு! - சென்னை கமிஷனர் உத்தரவு!

Advertiesment
Chennai traffic timing

Prasanth K

, வியாழன், 19 ஜூன் 2025 (12:12 IST)

நேற்று நடந்த சாலை விபத்தில் பள்ளி மாணவி பலியான நிலையில் கனரக வாகனங்களுக்கு சென்னையில் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

 

பெரம்பூரில் நேற்று பள்ளிக்கு தாயுடன் ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்த 10 வயது சிறுமி சௌமியா பின்னால் வந்த லாரி மோதியதில் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மக்கள் பள்ளிகளுக்கு, அலுவலகங்களுக்கு செல்லும் பிஸியான நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்குவதற்கான நேரக்கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது.

 

இந்நிலையில் இதுத்தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். அதன்படி காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் 8 மணி வரையிலும் பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. இந்த நேரக்கட்டுப்பாட்டை காவலர்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும். இந்த நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம்: தமிழக அரசு திட்டவட்டம் - உச்ச நீதிமன்றத்தில் பதில்!