Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று வரை ரூ.11 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்! – தேர்தல் ஆணையம் தகவல்!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (14:29 IST)
தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நாளிலிருந்து 11 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், பரிசுபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி 26ம் தேதி மாலை அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கட்சி சின்னங்கள், கட்சி தலைவர் சிலைகள் மறைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கட்சி சம்பந்தமான போஸ்டர்கள் ஒட்டுதல், கட்சி சார்பில் பரிசு பொருட்கள் அளித்தல் ஆகிய செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஆவணங்களின்றி பணம், பரிசுபொருட்கள் உள்ளிட்டவற்றை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியுள்ளது. கடந்த 5 நாட்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பரிசுப்பொருட்களின் மொத்த மதிப்பு 11 கோடி ரூபாய் என தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹத்தியெக்கு சுக்காவா..! வெளிநாட்டு பெண்களை கடத்தி கல்யாணம் செய்யும் சீனர்கள்! - ஏன் தெரியுமா?

மைசூர் ஸ்ரீ எல்லாம் செல்லாது.. மைசூர்பாக்கை கண்டுபிடித்தவரின் வாரிசு கண்டனம்..!

பிரான்ஸ் பிரதமர் கன்னத்தில் அறைந்த மனைவி.. நாங்க சும்மா விளையாடினோம் என விளக்கம்..!

என் கணவரை டிரைவர் என கூறுவதா? இந்தியர்களை கடுமையாக விமர்சனம் செய்த போலந்து பெண்..!

கமல்ஹாசன் உள்பட திமுக ராஜ்யசபா எம்பிக்கள் யார் யார்? வைகோ மீண்டும் எம்பி ஆவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments