Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலா விலகளுக்கு தினகரனே காரணம்? திவாகரன் பேட்டி!

சசிகலா விலகளுக்கு தினகரனே காரணம்? திவாகரன் பேட்டி!
, வியாழன், 4 மார்ச் 2021 (14:03 IST)
சசிகலாவின் முடிவை முழு மனதாக வரவேற்கிறேன் என சசிகலாவின் உறவினர் திவாகரன் பேட்டி. 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் தமிழக அரசியலில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக – அமமுக மீண்டும் இணைக்கப்படுமா என பேசப்பட்டு வந்த நிலையில் சசிக்கலா தனது அரசியல் ஓய்வை அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இது குறித்து திவாகரன் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, சசிகலாவின் முடிவை முழு மனதாக வரவேற்கிறேன். துரோகிகள் வெளியில் இல்லை. எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள். அவரைச் சுற்றியுள்ள டிடிவி தினகரன் உள்ளிட்டோரால்தான் சசிகலா இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் அரசியலுக்கு வருவதை விட அவருடைய உடல் நலனே முக்கியம்.
 
டிடிலி தினகரன் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டதும், அமமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக வரவேண்டும் என்று தினகரன் தெரிவித்ததும் சிறுபிள்ளைத் தனமானது. சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து முயற்சிகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, தினகரன் பேசியது இணைப்பு முயற்சியில் ஈடுபட்ட அதிமுகவினரின் கோபத்தை அதிகரித்திருக்கும்.
 
இது கூட சசிகலாவின் அறிவிப்பிற்கு காரணமாக இருக்கலாம். சசிகலா அவர்களின் விருப்பப் படி அதிமுக வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். இதுவே எனது விருப்பமும் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு! – சிவசேனாவால் அரசியலில் திருப்பம்!