Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவுக்கு தபால் வாக்கு வழங்கவேண்டும்…. அமமுக வேட்பாளர் கோரிக்கை!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (07:49 IST)
சசிகலா பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவருக்கு தபால் வாக்கு வழங்கவேண்டும் என அமமுக வேட்பாளர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஜெயலலிதாவின் உற்ற தோழியுமான சசிகலா அவருடன் போயஸ் கார்டன் இல்லத்தில் 30 ஆண்டுகளாக வசித்துவந்தார். அதனால் அவருக்கு வாக்கு அங்கேயே அளிக்கப்பட்டு இருந்தது.  ஆனால் அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற பின் அந்த வீடு அரசுடைமையாக்கப்பட்டதால் சசிகலா உள்ளிட்ட 19 பேரின் பெயர் அந்த பகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

சிறை தண்டனை பெற்று அவர் வெளியே வந்தும் தேர்தல் ஆணையத்தில் பேர் சேர்க்க சொல்லி விண்ணப்பித்தும் அவர் பெயர் இன்னும் சேர்க்கப்படவில்லை. அதனால் அவர் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் அமமுகவின் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர், ஆவின் வைத்தியநாதன் தலைமை தேர்தல் அதிகாரியிடம் இது தொடர்பாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ‘சசிகலாவுக்கு தபால் ஓட்டு வழங்கவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments