Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிக்கலாவுக்கு எதிராக தீர்மானம் போட்ட எடப்பாடியார்! – எடப்பாடிக்கே போன் போட்ட சசிக்கலா!

சசிக்கலாவுக்கு எதிராக தீர்மானம் போட்ட எடப்பாடியார்! – எடப்பாடிக்கே போன் போட்ட சசிக்கலா!
, வியாழன், 17 ஜூன் 2021 (14:02 IST)
அதிமுகவுக்கு எதிராக சசிக்கலா செயல்படுவதாக சசிக்கலாவுக்கு எதிராக இன்று அதிமுக மாவட்ட அளவில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், எடப்பாடி அதிமுக தொண்டருக்கு சசிக்கலா போன் பேசியுள்ளார்.

கடந்த சில நாட்களாக அதிமுக தொண்டர்களுடன் சசிக்கலா போனில் பேசுவதாக வெளியாகி வரும் தகவல்கள் அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அதிமுகவில் இருந்து கொண்டு சசிக்கலாவுடன் பேசியதாக அதிமுக பிரமுகர்கள் பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று மாவட்ட அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் சசிக்கலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. எடப்பாடி தொகுதியில் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, சசிக்கலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்.

இந்நிலையில் எடப்பாடி தொகுதியில் உள்ள தொண்டர் ஒருவருக்கு போன் செய்து பேசியுள்ள சசிக்கலா ”குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் தலைவராக இருக்க முடியாது. அப்படியானவரை தொண்டர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை வெளியாகிறது இந்தியாவுக்கான பப்ஜி கேம்! – இளைஞர்கள் எதிர்பார்ப்பு!