Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா குடும்பத்தினரின் 15 வங்கி லாக்கர்களுக்கு சீல்: வருமான வரித்துறை அதிரடி!

சசிகலா குடும்பத்தினரின் 15 வங்கி லாக்கர்களுக்கு சீல்: வருமான வரித்துறை அதிரடி!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (10:07 IST)
சசிகலா குடும்பத்தை குறிவைத்து அதிரடியாக சோதனை செய்த வருமான வரித்துறையினர், இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை நடத்தி முடித்துள்ளனர். இதன் முடிவில் சசிகலா குடும்பத்தினரை சேர்ந்தவர்களின் 15 வங்கி லாக்கர்களை சீல் வைத்துள்ளனர்.


 
 
நாடே பரபரக்கும் வகையில் சசிகலா குடும்பத்தினை வளைத்து வளைத்து சோதனை செய்தது வருமான வரித்துறை. சசிகலாவுக்கு சொந்தமான இடங்கள், நிறுவனங்கள், தினகரன், திவாகரன், விவேக், டாக்டர் சிவகுமார், கிருஷ்ணபிரியா என சசிகலா குடும்ப்பத்தினர் யாரும் தப்பவில்லை இந்த அதிரடி ரெய்டுக்கு.
 
குடும்பத்தினர் மட்டுமல்லாமல் அவர்களது உறவினர்கள், உதவியாளர்கள், ஆதரவாளர்கள் என எல்லாரையும் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது வருமான வரித்துறை. ஐந்து நாட்கள் துருவி துருவி, அங்குலம் அங்குலமாக சோதனை செய்த வருமான வரித்துறை கட்டுக்கட்டாக ஆவணங்கள், சொத்துக்கள், பணம், தங்கம், வைரம் உள்ளிட்டவையை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
 
மேலும் 100-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளையும் முடக்கிய வருமான வரித்துறை தற்போது சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்களின் 15 வங்கி லாக்கர்களையும் சீல் வைத்து தனது அதிரடியை காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments