Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி..! – சேலத்தில் பரபரப்பு!

அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி..! – சேலத்தில் பரபரப்பு!
, திங்கள், 18 ஜூலை 2022 (14:37 IST)
சேலத்தில் அரசு பள்ளி மாணவி ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் மேச்சேரியை சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள மேச்சேரி அரசு உயர்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தந்தையை இழந்த மாணவியை அவரது பெரியப்பா தினமும் பள்ளியில் கொண்டு வந்து விட்டு செல்வது வழக்கம்.

காலை பள்ளியில் ப்ரேயர் நடந்த நிலையில் அங்கு செல்லாமல் வகுப்பறையிலேயே அமர்ந்திருந்த மாணவி திடீரென தனது வகுப்பறை இருந்த மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிறுமி மாடியிலிருந்து விழுந்ததை கண்ட ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவிக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மாணவியை சந்தித்து நலம் விசாரித்த சேலம் கலெக்டர், மாணவி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாகவும், அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை