Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போராட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: இறந்த மாணவியின் பெற்றோர் தகவல்!

protest
, ஞாயிறு, 17 ஜூலை 2022 (13:15 IST)
போராட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: இறந்த மாணவியின் பெற்றோர் தகவல்!
சமீபத்தில் சின்னசேலம் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் மாணவியின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்
 
இந்த போராட்டம் திடீரென வன்முறையாக வெடித்தது என்பதும் பள்ளி பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பள்ளி அருகில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
 
இந்தநிலையில் தற்போது நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என மாணவியின் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார் 
 
வன்முறை வெடித்ததால் உறவினர்கள் பாதி வழியில் திரும்பி விட்டனர் என்றும் போராட்டத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மாணவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமிக்கு நீதிக் கேட்டு போராட்டம்..! – ட்ரெண்டாகும் #justiceforsrimathi