Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்பனை- அமைச்சர் ஐ.பெரியசாமி..

Advertiesment
Tomato
, வெள்ளி, 20 மே 2022 (17:34 IST)
தமிழகத்தில் சில நாட்களாக தக்காளியின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் குடும்பத்தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை கோயம்பேட்டில் இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.100 க்கு விற்கப்பட்டது. மழைப்பொழிவு மற்றும் வரத்துக் குறைவால் கோயம்பேட்டில்  நேற்று தக்காளி விலை 20 வது நாளாக அதிகரித்தது.

இதுகுறித்து தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளதாவது:

வெளிச்சந்தைகளில் தக்காளில் விலை ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்படும் நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.75 முதல் ரு.85  வரை விற்பனை ஆகிறதாகவும் நாளை முதல் அனைத்து மாவட்டங்களில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் குறைந்த   விலையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை- வானிலை ஆய்வு மையம்