Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியை அடுத்து இமாச்சல பிரதேசம்.. மகளிர்களுக்கு மாதம் ரூ.1500.. தகுதி தேவையில்லை..!

Siva
செவ்வாய், 5 மார்ச் 2024 (09:06 IST)
நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மகளிர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். 
 
தமிழகம் உள்பட ஒரு சில தென்னிந்திய மாநிலங்களில் மகளிர்களுக்கு மாதம் ரூபாய் 1000 முதல் 2000 ரூபாய் வரை வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த கட்டமாக டெல்லி முதல்வரின் இந்த அறிவிப்பு அம்மாநில பெண்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதே நேரத்தில் எந்தவித தகுதியும் தேவையில்லை என்றும் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் டெல்லியை அடுத்து தற்போது இமாச்சல பிரதேசம் மாநிலத்திலும் மகளிர்களுக்கு மாதம் ரூபாய் 1500 ரூபாய் வழங்கப்படும் என்றும் பாகுபாடு இன்றி அனைத்து பெண்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் இமாச்சல பிரதேசம் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். 
 
தமிழகம் தான் இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்த நிலையில் மகளிர்க்கு மாதம் பணம் என்ற திட்டம் படிப்படியாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் மட்டும்தான் தகுதி உள்ள பெண்களுக்கு இந்த பணம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அனைத்து பெண்களுக்கும் இந்த பணம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
Edited by siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாம்பழ லாரி கவிழ்ந்து விபத்து.. மூட்டை மூட்டையாய் அள்ளி சென்ற பொதுமக்கள்..!

லிவ் இன் காதலியை விபச்சாரத்திற்கு தள்ள முயன்ற காதலன்.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

காசு கொடுத்தால் மனைவியுடன் உல்லாசம்.. தட்டி கேட்க வந்த போலீஸும்..? - பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

17 நீதிபதிகளை டிஸ்மிஸ் செய்த டிரம்ப்.. அறிவுகெட்ட செயல் என கடும் விமர்சனம்..!

75 வயது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயது மருமகன்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments