Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

7-வது முறையாக சம்மன்.. ஆஜராகாவிட்டால் கைது செய்யப்படுவாரா கெஜ்ரிவால்?

7-வது முறையாக சம்மன்.. ஆஜராகாவிட்டால்  கைது செய்யப்படுவாரா கெஜ்ரிவால்?

Mahendran

, வியாழன், 22 பிப்ரவரி 2024 (13:10 IST)
மதுபான ஊழல் வழக்கில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு ஆறு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆறு முறையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் தற்போது ஏழாவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருப்பதாகவும் இந்த முறையும் அவர் ஆஜராகவில்லை என்றால் அவரை அதிரடியாக கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஏற்கனவே டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களையும் விசாரணை செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்

ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரானால் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்பதால் ஏற்கனவே ஆறு முறை அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் பிப்ரவரி 26 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் ஏழாவது முறையாக ஆஜராக மாட்டார் என்று கூறப்படும் நிலையில் இம்முறை அவர் ஆஜராகவில்லை என்றால் அதிரடியாக அவரை கைது செய்யாமல் அமலாக்கத்துறை  திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கல்கூட வைக்க முடியாது.. அமைச்சர் துரைமுருகன்