Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 9,844 மாணவர்கள் ஆப்சென்ட்.. அதிர்ச்சி தகவல்..!

Siva
செவ்வாய், 5 மார்ச் 2024 (09:02 IST)
நேற்று 11ஆம் வகுப்பு பொது தேர்வு தொடங்கிய நிலையில் முதல் நாள் இந்த தேர்வை எழுத தமிழகம் முழுவதும் இருந்து 9,844  மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மார்ச் 1ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு தொடங்கிய நிலையில் நேற்று 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது என்பதும், முதல் நாளில் தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வு எழுத நான் 9,844 மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வரவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

 தமிழக முழுவதும் 332 மையங்களில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வை எழுத இருந்த நிலையில் 9,844 மாணவர்கள் தேர்வு எழுத ஏன் வரவில்லை என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த சில வருடங்களாகவே தமிழ் தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் தமிழ் மீது மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்து விட்டதா என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வரை வேலை.. வணிக நிறுவன ஊழியர்களுக்கு புதிய விதி: அரசு உத்தரவு!

மேலும் 2 நாடுகளில் UPI அறிமுகம்.. பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் ஒரு புதிய மைல்கல்..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி விவகாரம்: குற்றம் நடந்தபின் சரக்கடித்துவிட்டு சாப்பிட்டு பதட்டமின்றி சென்ற மிஸ்ரா..!

மக்களை காக்க, தமிழகத்தை மீட்க.. உங்களை காண வருகிறேன்! - எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments